மனைவியின் சந்தோசத்திற்கு கணவன் செய்த வேலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவியின் சந்தோசத்திற்கு கணவன் செய்த வேலை!


கொழும்பில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


$ads={2}

ஹெரோயின் 152 கிராம் மற்றும் கேரளா கஞ்சா 5 கிலோ கிராமினை மோட்டார் சைக்கிளில் கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் உட்பட மூன்று பேரும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். இவர்களில் ஒரு சந்தேக நபர், குறித்த ஆசிரியரிடம் கணித பாடம் கற்கும் மாணவராகும்.

ஆசிரியரின் மனைவிக்கு நவீர ரக வாகனம் ஒன்று கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு மாணவர்களையும் பயன்படுத்தி ஆசிரியர் போதைப்பொருள் கடத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.