எச்சரிக்கை - தீப்பற்றிய கப்பல் சிதறி வெடிப்பதற்கு வாய்புகள் அதிகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எச்சரிக்கை - தீப்பற்றிய கப்பல் சிதறி வெடிப்பதற்கு வாய்புகள் அதிகம்!


மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசர கால முன்னாயத்த செயற்பாடுகள் என்ற வகையிலான அறிக்கையொன்று அம்பாறை மாவட்ட செயலகத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2020.09.03ஆம் திகதி சங்கமன் கந்தமுனை பிரதேச கடலில் 38 மைல் தொலைவில் மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீப்பிடித்துள்ளதுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை, விமானப்படை, கரையோர பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதும் தீயினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. அத்துடன் கொள்கலன் கப்பல் வெடித்து சிதற கூடிய சந்தர்ப்பமும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் வெடிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.