கொரோனா கட்டுப்படுத்தும் செயற்பாட்டு வரிசையில் இலங்கை இரண்டாம் இடம், சீனாவுக்கு முதலிடம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா கட்டுப்படுத்தும் செயற்பாட்டு வரிசையில் இலங்கை இரண்டாம் இடம், சீனாவுக்கு முதலிடம்!


கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்ட 108 நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

YICAI என்ற சீன ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பட்டியலுக்கு அமைய உலகளாவிய ரீதியில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு கிடைத்த உயர்ந்த இடம் இதுவாகும். இந்த பட்டியலில் முதலிடத்தை சீனா பிடித்துள்ளது.

இதன் முழுமையான அறிக்கை ஒக்டோபர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கைக்கமைய உலகின் முதல் 10 நாடுகளில் 9 நாடுகள் ஆசிய - பசுபிக் நாடுகளாகும். சீனா, இலங்கை, தென் கொரியா, மியன்மார், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளாகும்.


பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாக பெயரிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பிரேசில் 89 ஆம் இடத்திலும் அமெரிக்கா 98வது இடத்திலும் உள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.