கண்டியில் கட்டிடம் வீழ்ந்து மூவர் பலியான அனர்த்தம் - தாழிறக்கத்திற்கான காரணம் இது தான்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் கட்டிடம் வீழ்ந்து மூவர் பலியான அனர்த்தம் - தாழிறக்கத்திற்கான காரணம் இது தான்


கண்டியில் நேற்று ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்தமையினால் 3 பேர் உயிரிழந்ததுடன் பெரும் பாதிப்பும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பள்ளத்தாக்கின் தொடக்க பகுதியில் இந்த கட்டடம் கட்டப்பட்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

பள்ளத்தாக்கு பகுதியில் தளர்வான மண் அடுக்குகளின் மீது ஐந்து மாடி வீடு கட்டப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் கண்டி மாவட்ட புவியியலாளர் சமந்த போகஹபிட்டிய தெரிவித்துள்ளனர்.


$ads={1}

அதன் பாரத்தை தாங்க முடியாமல் கட்டிடம் தாழிறங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையின் கீழ் அந்த இடத்திற்கு அருகில் உள்ள 4 வீடுகளில் உள்ளவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அந்த கட்டிடம் தாழிறங்குவதற்கு நில அதிர்வு காரணம் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கண்டி, பூவெலிகட பிரதேசத்தில் நேற்று தாழிறங்கிய கட்டிடம் ஒன்றில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சமில் பிரசாத் என்ற வர்த்தகரும் அவரின் சட்டத்தரணியான மனைவியும் ஒன்றரை மாத குழந்தையுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.