வாழைச்சேனையில் மாயமான இளம்பெண் - தாயின் வேண்டுகோள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாழைச்சேனையில் மாயமான இளம்பெண் - தாயின் வேண்டுகோள்


வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ என்பவர் கடந்த மூன்று வருடமாக காணாமல் போன நிலையில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது தாயார் வெள்ளத்தம்பி கசீனாஉம்மா (55) தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (23) என்பவர் கடந்த 2017.12.29ம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது தாயார் தெரிவித்தார்.


$ads={1}

குறித்த பெண் 18 வயதில் திருமணம் செய்து கணவருடன் மூன்று மாதம் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கணவன் வேறு திருமணம் செய்தமையால் பிரிந்து தங்களுடன் வாழ்ந்து வந்தார்.

அதன் பின்னர் கடந்த 2017.12.29ம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழும்பி பார்க்கும் போது உறங்கிய மகளை காணவில்லை என்றும், மகள் வீட்டில் இருந்து அவரது உடைகள் மற்றும் ஆபரங்களை எடுக்காமல் உடம்பில் போடப்பட்ட ஆபரணங்களுடனும், கையடக்க தொலைபேசியுடனும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 2017.12.30ம் திகதி முறைப்பாடு செய்ததுடன், இவரது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியபோதும் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் அந்த தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.


$ads={2}

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு தொடர்பில் விசாரித்தால் தங்களது மகளை தேடிக் கொண்டுதான் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். ஆனால் இன்னும் எந்த பதிலும் இல்லை. எனவே காணாமல் போன எனது மகளை கண்டறிந்தால் எனது 0758304796 என்ற தொலைபேசி இலத்திற்கு அறியத்தருமாறு அனைவரையும் வேண்டுகின்றேன் என வெள்ளத்தம்பி கசீனாஉம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.