பெப்ரவரியில் இலங்கைக்கு புதிய விமான சேவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெப்ரவரியில் இலங்கைக்கு புதிய விமான சேவை!


இலங்கையின் புதிய சர்வதேச விமான நிறுவனமாக 'ஸ்பார்க் ஏர்' எனும் புதிய நிறுவனம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் (2021) நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளது.

மத்தளை சர்வதேச விமான நிலையத்தை பிரதன தளமாகக் கொண்ட ஸ்பார்க் ஏர் சேவை, கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆரம்பத்தில் இரண்டு Airbus A330 சரக்கு விமானங்களை கொண்டு இயங்கவுள்ளது.

மேலும் இதன் பயணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஸ்பார்க் ஏர் விமான சேவையின் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளின் தலைவர் உதித தன்வத்தே தெரிவித்தார்.

இதுவரை வெளியிடப்படாத நேரடி முதலீடு மூலம் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஸ்பார்க் ஏர் நிறுவனம் இயங்கவுள்ளது.

பயணிகள், சரக்கு மற்றும் தபால் சேவைகளுக்காக ஸ்பார்க் ஏர் நிறுவனத்திற்கு சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAASL) உரிமம் வழங்கியுள்ளது, மேலும் இதற்கு கேப்டன் ராபர்ட் ஸ்பிட்டல், ரம்ஸி ரஹீம், சமின் அத்தநாயக்க, ஆஷான் டி சில்வா மற்றும் சுரஞ்ஜய டி சில்வா ஆகியோர் நிறுவனம் சார்பாக சர்வதேச போக்குவரத்து நடவடிக்கைகளை இயக்க அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.