அம்பிட்டிய சுமணரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அம்பிட்டிய சுமணரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜர்!


மட்டக்களப்பு - பண்டாரவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட 3 ஆஜராகினார். 

மேலும், அவர்களை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் எதிர்வரும் நவம்பர் 27 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார். 

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பண்டாரவெளி பகுதியில் பௌத்த மத அடையாளம் இருப்பதாக குறித்த பகுதியில் கடந்த காலங்களில் சுமணரத்தன தேரர் சென்ற நிலையில் பல சர்ச்சைகள் இடம்பெற்று நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றது. 

குறித்த இடத்தில் தொல்லியல் திணைக்களம் அடையாளம் கண்டு அங்கு திணைக்களம் தற்காலிக கொட்டகை அமைத்து தொல்பொருள் ஆராச்சிகள் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில், கடந்த 21 ஆம் திகதி அங்கு சென்ற அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக கரடியானு பொலிசார் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் அவருடன் சேர்ந்த 3 பேருக்கும் இவர்களுக்கு எதிராக ஆதிகாரிகளை தாக்கியது, அவர்களை தடுத்து வைத்தது அதிகாரிகள் கடமையை செய்யாவிடாது இடையூறு ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டு சாட்டப்பட்டு வழக்கு தாக்குதல் செய்தனர். 

இதனையடுத்து இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட 3 பேர் ஆஜராகினர் இதன்போது இவர்களை நீதவான் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவித்ததுடன் தொல்லியல் திணைக்களத்துக்கு இடையூறு செய்யக்கூடாது, பொதுமக்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் எச்சரித்து, கரடியாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை நீதிமன்ற பகுதில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதுடன், தேரர் 50 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.