மேலும் ஒரு புத்தர் சாரி விவகாரம்; பெண்ணொருவர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் ஒரு புத்தர் சாரி விவகாரம்; பெண்ணொருவர் கைது!!


புத்தர் சிலை உருவம் பதிக்கப்பட்ட சாரியை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

வைத்தியர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண், அந்த மருத்துவர் சுகயீனமடைந்து குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பார்க்க வந்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு வைத்தியரின் மகளுடன் பொலிஸார் தொடர்புகொண்டு பிறிதொரு சாரியை வழங்கும்படி பணித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.