நாட்டில் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!

நாட்டில் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (10) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார்.

மேலும், கல்வி முறையை மேம்படுத்தும் வகையில் மாவட்ட கல்வி குழுக்களை நியமிக்க ஜனாதிபதியும் பிற இராஜாங்க அமைச்சர்களும் கலந்துரையாடி முடிவு செய்துள்ளனர்.

வலயக் கல்வி பணிமனைகளுக்கும் பிரதேச அலுவலகங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முடிவுகள் எட்டப்பட்டது.

மேலும், ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது என்பவற்றைத் தவிர்த்து, ஏனைய பாடசாலை அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் விடயங்களில் அரசியல்வாதிகள் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை  மீள்நிரப்புவதற்கு பதில் அதிபர்களை நியமிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகளில் திறமையான மற்றும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.