PHOTOS: பங்களாதேஷின் மசூதியில் வெடிப்பு சம்பவம்; இதுவரை 12 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: பங்களாதேஷின் மசூதியில் வெடிப்பு சம்பவம்; இதுவரை 12 பேர் பலி!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள ஒரு மசூதியில் ஏர் கண்டிஷனர்கள் (Air Conditioner) வெடித்ததில் ஒரு குழந்தை உட்பட சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாராயங்கஞ்ச் நதி துறைமுக நகரத்தில் உள்ள மசூதியில் நேற்று (04) இரவு குறித்த இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஒரு குழந்தை நேற்றே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்ற அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 11 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 25 பேர் இப்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீக்காயங்கள் காரணமாக அவர்களின் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கசிந்த குழாய் வரியிலிருந்து எரிவாயு குவிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு AC வெடிப்பைத் தூண்டி இருக்கக்கூடும் என்று தீயணைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

“மசூதிக்கு அடியில் டைட்டாஸ் கேஸ் குழாய் ஒன்று செல்கிறது. ஜன்னல்கள் மூடப்பட்டதால் குழாயிலிருந்து எரிவாயு கசிந்து உள்ளே குவிந்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். யாரோ AC க்கள் அல்லது பேன்களை இயக்க அல்லது அணைக்க முயன்றபோது தீப்பொறிகள் காரணமாக வெடிப்பு தூண்டப்பட்டிருக்கலாம்.” என தீயணைப்பு சேவையின் துணை உதவி இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு சேவை துறைகள் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இதற்கிடையே மசூதியில் இருந்த அனைத்து AC’க்களும் ஒரே நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ஏதேனும் தீவிரவாத தாக்குதலோ என அப்பகுதி மக்கள் சிறிது நேரம் அச்சத்தில் உறைந்து போனதாக கூறினர்.







Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.