இலங்கை மீண்டும் முடக்கப்படவுள்ளதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மீண்டும் முடக்கப்படவுள்ளதா?


தென்னிலங்கையின் சில பகுதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை சென்றுள்ளமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது  

குறித்த ரஷ்ய நாட்டவர் மாத்தறையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றதன் காரணமாக அந்த நகரத்தை தனிமைப்படுத்துவது தொடர்பில் சுகாதார பிரிவு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர் மற்றும் அவரது நண்பர் மாத்தறை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளதாகவும் அவருக்கு அருகில் பயணித்தவர்களை தற்போது வரையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதேவேளை இந்த ரஷ்ய நாட்டவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.