கப்பல் உரிமையாளரிடம் 340 மில்லியன் நட்டம் கோரியுள்ள இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கப்பல் உரிமையாளரிடம் 340 மில்லியன் நட்டம் கோரியுள்ள இலங்கை அரசு!


நாட்டிக் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான MT New Diamond கப்பல் தொடர்பில் 340 மில்லியன் ரூபா நட்டம் கோரப்பட்டுள்ளது.


சட்ட மா அதிபரினால் இந்த நட்டஈட்டு கோரிக்கைக்கான அறிக்கை MT New Diamond கப்பலின் உரிமையாளர்களது வழங்கறிஞ்சர் குழாமிடம்  கையளிக்கப்பட்டுள்ளது..


MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், அது சார்ந்ததாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவீனங்களை அடிப்படையாக கொண்டு இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு பெருமளவு தொகையான மசகு மற்றும் டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்த MT New Diamond கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்ப்பரப்பில் தீப்பரவலுக்கு உள்ளானது.


இந்நிலையில், இலங்கை கடற்படை உள்ளிட்ட 15 திணைக்களங்கள் ஒன்றினைந்து பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கப்பலின் தீப்பரவலை கட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.