20ஆவது திருத்தம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! அரச தரப்பு உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20ஆவது திருத்தம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! அரச தரப்பு உறுதி!


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நாளை (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதி செய்தார்.


மேலும் 20ஆவது திருத்தம் குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலை எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் மீளப்பெறாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு புதிய சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கான மக்கள் ஆணையை அரசாங்கம் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தனது நடவடிக்கை எதனையும் மக்களிடமிருந்து மறைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அரசமைப்பு திருத்த நடவடிக்கைகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற விவாதத்தின் போது அனைத்து தரப்பினரும் தங்கள் மாற்றங்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.