20ஆவது சட்டத்திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20ஆவது சட்டத்திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்!


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றம் செல்லவுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


கண்டியில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் உத்தேச திருத்தத்தில் பல தவறுகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.


உத்தேச திருத்தத்தினை மேலும் பலர் எதிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து கருத்துக்கள் வெளியாகியுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான உறுதியான கால எல்லையை அல்லது யோசனைகளை முன்வைக்கவில்லை என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை குறைத்து ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு 20வது திருத்தம் முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்


நாட்டுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியம் ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பாதுகாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.