குறித்த சந்தேக நபரின் வயிற்றில் இருக்கும் தங்கச் சங்கிலியைப் பெறுவதற்காகவும், அதை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் சந்தேக நபரை ஆஜர்படுத்தி சிறை மருத்துவரால் பரிசோதிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர் ஹட்டன் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் எனவும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ. 300,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து ஹட்டன் காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு புகார் கிடைத்தை அடுத்து, விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் ஹட்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். இதன் விளைவாக, சந்தேக நபர் பற்றிய தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது. காவல்துறையினர் சந்தேக நபரை அணுகியபோதே, அவர் கொள்ளையடித்த தங்கச் சங்கிலியை விழுங்கியுள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்டதும், சந்தேக நபர் X-ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், இதன் மூலம் சந்தேக நபரின் வயிற்றில் தங்கச் சங்கிலி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.