கொள்ளை அடித்த தங்கச் சங்கிலியை விழுங்கிய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொள்ளை அடித்த தங்கச் சங்கிலியை விழுங்கிய நபர் கைது!

பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் கொள்ளை அடித்து பின்னர் அதை விழுங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க ஹட்டன் மாஜிஸ்திரேட் திருமதி தமயந்தி பெர்னாண்டோ இன்று (08) உத்தரவிட்டார்.


குறித்த சந்தேக நபரின் வயிற்றில் இருக்கும் தங்கச் சங்கிலியைப் பெறுவதற்காகவும், அதை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் சந்தேக நபரை ஆஜர்படுத்தி சிறை மருத்துவரால் பரிசோதிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.


சந்தேக நபர் ஹட்டன் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் எனவும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ. 300,000  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் குறித்து ஹட்டன் காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு புகார் கிடைத்தை அடுத்து, ​​விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் ஹட்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். இதன் விளைவாக, சந்தேக நபர் பற்றிய தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது. காவல்துறையினர் சந்தேக நபரை அணுகியபோதே, ​​அவர் கொள்ளையடித்த தங்கச் சங்கிலியை விழுங்கியுள்ளார்.


பின்னர் கைது செய்யப்பட்டதும், சந்தேக நபர் X-ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், இதன் மூலம் சந்தேக நபரின் வயிற்றில் தங்கச் சங்கிலி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.