மேர்வின் சில்வாவின் மகனை கைது செய்ய விசேட பொலிஸ் குழு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேர்வின் சில்வாவின் மகனை கைது செய்ய விசேட பொலிஸ் குழு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவை  கைது செய்வதற்கான நடவடிக்கையில் விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.


பத்தரமுல்லையை சேர்ந்த வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் மேர்வின் சில்வாவின் மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


மாலகவை கைது செய்வதற்காக பொலிஸார் மேர்வின் சில்வாவின் வீட்டுக்கு சென்றனர் எனினும் அவரும் தந்தையும் அங்கு இல்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


மேர்வின் சில்வாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி வழங்குமாறு வர்த்தகர் ஒருவரை மேர்வின் சில்வாவின் மகன் அச்சுறுத்தினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஜூன் 09 ஆம் திகதி தொலைபேசி மூலம் மாலக இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். எனினும் குறிப்பிட்ட வர்த்தகர் தனது வர்த்தகம் நட்டத்தில் காணப்படுவதால் தன்னால் பணம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.


எனினும் மாலக்க தொடர்ந்து வலியுறுத்தி அச்சுறுத்தல் விடுத்து வந்ததுடன் ஜூன் 15 ஆம் திகதி குறித்த நபருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வர்த்தகர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது..


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.