மொட்டுடன் சேரவுள்ள சிறிய கட்சிகளின் விபரம் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொட்டுடன் சேரவுள்ள சிறிய கட்சிகளின் விபரம் வெளியாகின!

2020 பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் நான்கு சிறிய கட்சிகளுடன் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.


தேர்தல் முறையில் 128 ஆசனங்களையும் தேசிய பட்டியலில் 17 ஆசனங்களையும் மொத்தமாக 145 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.


கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) 2 ஆசனங்கள், பிள்ளையானின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியில் ஒரு ஆசனம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP) யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஆசனம், அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸ் (NC) பெற்றுக்கொண்ட ஆசனம், அதுரலிய ரதன தேரரின் தலைமையிலான அபே ஜன பலவேகய கட்சியின் ஆசனம், என 151 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பலமான தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.


இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதில் சேருகிறார்களா என்பதைப் பொறுத்து நிலைமை மேலும் மாறக்கூடும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.