
ஐ.தே கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் தெரிவித்த கருத்துக்களை ஒரு தனியார் தொலைக்காட்சி தவறாகப் புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளதாக ரணிலின் சகாவான லசந்த கூணவர்தன தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்திறனுக்குப் பிறகு ரணில் தனது பதவியில் இருந்து விலகுமாறு கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்த ஐ. தே கட்சிக்கு சமீபத்தில் நிறைவுபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை மாத்திரமே பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

