ரணில் ஐ.தே கட்சியின் கட்சி தலைமை விட்டுக்கொடுத்ததாக பரவிய செய்தி போலியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணில் ஐ.தே கட்சியின் கட்சி தலைமை விட்டுக்கொடுத்ததாக பரவிய செய்தி போலியானது!

இன்று (10) ஐ. தே. கட்சியின் எந்தவொரு செயற்குழு கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், விக்ரமசிங்க கட்சித் தலைமையிலிருந்து விலக முடிவு செய்யவில்லை என்றும் ஐ. தே. கட்சியின் செயற்குழு உறுப்பினரும் தேசிய பட்டியல் வேட்பாளருமான லசந்த கூணவர்தன தெரிவித்தார்.


ஐ.தே கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் தெரிவித்த கருத்துக்களை ஒரு தனியார் தொலைக்காட்சி தவறாகப் புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளதாக ரணிலின் சகாவான லசந்த கூணவர்தன தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். 


எவ்வாறாயினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்திறனுக்குப் பிறகு ரணில் தனது பதவியில் இருந்து விலகுமாறு கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.


ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்த ஐ. தே கட்சிக்கு சமீபத்தில் நிறைவுபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை மாத்திரமே பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.