இன்று மேலும் பல தொற்றாளர்கள் இனம் காணப்பட்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று மேலும் பல தொற்றாளர்கள் இனம் காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் பொலன்னறுவையில் உள்ள சேனபுர புனர்வாழ்வு மையத்தில் இருந்த கைதிகள் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று 14 பேர் குணமடைந்திருந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,593 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் தற்போது 263 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு 64 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.