நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி; பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு செயன்முறையே காரணம்! -சம்பிக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி; பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு செயன்முறையே காரணம்! -சம்பிக்க

புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு செயன்முறைகள் நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், இதன் காரணமாக வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை உரிய வேளையில் திருப்பிச்செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இவ்வாண்டுக்கான அரசாங்கத்தின் வருமானம், கடன்களுக்கான வட்டியை மீளச்செலுத்துவதற்கே போதுமானதாக இருக்காது.

இதன்காரணமாக இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசாங்கம் பெற்ற கடன்களை உரிய திகதிக்குள் முழுமையாக மீளச்செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர்மாதத் தொடக்கத்தில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கான தூண்டுதலாக அமைந்ததுடன், அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டமையால் நிலைமை மேலும் மோசமடைந்தது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.