நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா?

நாடாளுமன்றதின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவை நியமிக்க அரச தரப்பு தீர்மானித்துள்ளது என ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்தப் பதவிக்கு நியமிக்கவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும், ஆனால் அதனை ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் நிராகரித்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.


எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு குறித்த கலந்துரையாடல்கள் கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சபாநாயகர் தெரிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் வட்டாரங்களின் மூலமாக தெரியவருகின்றது.


அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் மஹிந்த யாப்பாவை புதிய சபாநாயகராக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆளும் தரப்பின் உள்ளகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.