
இந்நிலையில் 2 மணி நேரத்திற்குள் மின்சார துண்டிப்பு சீர் செய்யப்படலாம் என மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
குறித்த மின்சார துண்டிப்பை சீர் செய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் தற்போதும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மின்சார துண்டிப்பு காரணத்தால் வீதிகளில் இயங்கும் சமிஞ்சை விளக்குகள் செயலிழந்துள்ளதால் கொழும்பு நகர் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.