சற்றுமுன் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்!

துபாயில் இருந்து கேரளாவின் காலிகட் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று இரவு காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் (கரிபூர் விமான நிலையம்) தரையிறங்கும் போது சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் சுமார் 190 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மலப்புரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் இன்று (07) வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானம் ஓடுபாதையை விட்டு 30 அடி சரிந்த நிலையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

தற்போது, ​​காலிகட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி, வழமையாக கரிபூர் விமான நிலையத்தில் வானிலை மோசமாக இருந்தால் இது ஒரு டேபிள் டாப் (Table Top) விமான நிலையம் என்பதால் விமானங்களை அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. எனினும், அது குறித்த இந்த விபத்துக்குள்ளான விமானத்திற்கு அவ்வாறு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.