
நுவரெலிய, ராகல பகுதியை சேர்ந்த 41 வதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2014.10.24 ஆம் திகதி இரவு தன்னுடைய மூன்றரை வயது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளின் மனைவி குவைட் நாட்டில் வேலை செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு சென்றுள்ளதுடன் அவர் இந்நாட்டில் வேறு ஒரு இளைஞருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை அறிந்த கணவன் மனவிரக்தி காரணமாக தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.