ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 03 பேர் மற்றும் ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வௌியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2,658 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 217 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.