இவ்வாறு தொற்றுக்கு கண்டறியப்பட்டவர்களில் 06 பேர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாட்டுக்குத் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருவர் சென்னையில் இருந்தும் மற்றையவர் துருக்கியில் இருந்தும் தாயகம் திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இன்று 24 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இதுவரை 2,789 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்னும் 127 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதுடன் இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது