சற்றுமுன்னர் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன்னர் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இலங்கையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,822 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாலை வரை 2,817 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஐந்து பேரே இவ்வாறு தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,514 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் 297 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.