ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டிற்கு அழிவானது எனவும், இந்த அழிவு காரணமாகவே மக்கள் ஈஸ்டர் தாக்குதலில்உயிர்களை இழந்தனர் எனவும் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

19ஆவது திருத்தச் சட்டம் இந்த நாட்டிற்கு அழிவானது. அராஜகமான நிலைமை. இதனால், மக்கள் இழப்பீட்டை செலுத்தியுள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் நடந்தது.

பாதுகாப்பு சீர்குலைந்தது. பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற எவருமில்லை. 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சுஉட்பட எந்த அமைச்சையும் ஜனாதிபதி வகிக்க முடியாது என்று கூறுகின்றனர்.
$ads={1}

அது முற்றிலும் தவறு. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரதான பொறுப்பு ஜனாதிபதிக்கே வழங்கப்படுகிறது. அதற்கு சட்டரீதியானஅடிப்படைகளை நாங்கள் கண்டறிய முடியும்.

எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு உட்பட எந்த அமைச்சையும்வகிக்க முடியாது.
$ads={2}

19ஆவது திருத்தச் சட்டம் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு கடந்த காலத்தில் பெரிய இழுப்பறி ஏற்பட்டது. எதனையும் செய்யமுடியாமல் போனது. அப்படியானால் இது நாட்டிற்கு பெரிய அழிவு.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மாத்திரமல்ல நாட்டு மக்களின் உயிர்களும் அழிவு.

இதனால், 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்.

அதில் இருந்தே நாங்கள் ஆரம்பிப்போம். இதன் பின்னர் முழுமையான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம் எனவும்குறிப்பிட்டுள்ளார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.