தங்கத்தின் விலையில் அதிகரிப்பு - மிக முக்கியமாக வடக்கில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு - மிக முக்கியமாக வடக்கில்!

வட மாகாணத்தில் தங்கத்தின் விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி வர்த்தக நிலையங்களில் தங்கம் ஒரு பவுனின் விலை, கொழும்பில் விற்பனை செய்வதை விடவும் 10 - 15ஆயிரம் ரூபாயில் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
$ads={1}
கொழும்பில் 24 கரட் தங்கத்தின் விலை 97500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணத்தில் அது ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் விலை கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் 12000 ரூபாவாகஅதிகரித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் கருத்து வெளியிடுகையில், எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஆலயதிருவிழாக்கள் நடைபெறும். இந்த மாதங்களில் திருமண நிகழ்வுகளும் அதிகமாக நடைபெறுவதால் தங்கத்தின் விலைஅதிகரித்துள்ளது.

$ads={2}
இந்து மக்கள் மே மற்றும் ஜுன் மாதங்களிலேயே திருமண நிகழ்வுகளை அதிகம் ஏற்பாடு செய்கின்றனர். எனினும் கொரோனா வைரஸ்பரவல் காரணமாக இந்த நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளது. 

இதனால் அடுத்த இரண்டு மாதங்களில் அதிகளவான திருமணங்கள்நடைபெறவுள்ளமையினால் தங்கத்தின் விலை பாரியளவு அதிகாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.