பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்!

நுவரெலியா - நோர்வுட் பகுதியில் 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை கத்தியால் கழுத்தறுத்து விட்டு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் நாவலபிட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று (29) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண் நேற்றைய தினம் நோர்வுட் நகர பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை பின்பக்கமாக இருந்து கழுத்து பகுதியில் அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை நோர்வுட் பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த பெண்ணை சந்தேகநபர் வெட்டியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நோர்வுட் மேற்பிரிவு தோட்டபகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.