குண்டு வெடித்து காயங்களுடன் பிரசவம் பார்த்த வைத்தியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குண்டு வெடித்து காயங்களுடன் பிரசவம் பார்த்த வைத்தியர்!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த குடோன் திடீரென வெடித்ததில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதம் ஏற்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கியது மட்டுமின்றி இதில் பலர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த சம்பவத்தால் பெய்ரூட் முழுவதும் பெரும் பதட்டத்தில் இருந்தது.

$ads={1}

இந்த நிலையில் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடிகுண்டு சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை முழுவதுமே கிட்டத்தட்ட இடிந்து சிதிலம் அடைந்து கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தது. ஆனாலும் அந்த இக்கட்டான இடத்திலும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்தார்.

அமோனியம் நைட்ரேட் வெடிகுண்டால் டாக்டருக்கும் முகமும் உடம்பின் பல பகுதிகளில் காயமேற்பட்டு ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த போதிலும் அவர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அந்த மருத்துவர் பிரசவம் பார்த்தார்.

$ads={2}

இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்ற நிலையில் , அந்த கர்ப்பிணியையும் குழந்தையையும் காப்பாற்றிய அந்த டாக்டருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.