கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சஞ்சீவ தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
பிரதான சந்தேக நபரான மேயர் சஞ்சீவ தனது ரிட் மனுவில், இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களும் பல அரசியல் விளக்கங்களும் பொதுமக்கள் முன் அவரை தவறான சித்தரித்து காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குருநாகல் பொலிஸ் தலைமையகங்களின் காவல்துறை ஆய்வாளர், குருநாகல் விசேட குற்றவியல் விசாரனைப் பிரிவின் ஓ.ஐ.சி, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி, தொல்பொருள் ஆணையர் பேராசிரியர் செனரத் திசானாயக மற்றும் குருநாகல் மாஜிஸ்திரேட் ஆகியோர் பிரதிவாதிகளாக மேற்கோள் காட்டப்பட்டனர்.
அதன்படி, மேயர் உட்பட ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ய குருநாகல் நீதவான் பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 13 வரை நீடிக்கப்பட்டிருந்தது.
சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் தடை உத்தரவும் அதில் பிறப்பிக்கப்பட்டிருந்தது.