கண்டியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறைபாடுள்ள கொடிகளை நாமே நீக்கினோம். -கண்டி மாநகர சபை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறைபாடுள்ள கொடிகளை நாமே நீக்கினோம். -கண்டி மாநகர சபை

வரலாற்று சிறப்பு வாய்ந்த கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகையின் 'மகுல் மடுவ' எனும் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக நகரப் பகுதியைச் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்த சிறுபான்மையினரைக் குறிக்கும் வண்ணக் கோடுகள் இல்லாத சில ‘குறைபாடுள்ள’ தேசியக் கொடிகளை அகற்ற கண்டி மாநகர சபை அவசர நடவடிக்கை எடுத்தது.


கண்டி மாநகர சபை ஆணையர் சந்தன தென்னகோன் இச்செய்தியினை தேசிய செய்தி ஊடகம் ஒன்றிக்கு உறுதிப்படுத்தினார்.


மேலும், முன்னதாக ‘சிங்கம் மட்டும்’ உள்ளடங்கிய கொடிகள் நகராட்சி ஊழியர்களால் போடப்பட்டன, ஆனால் அவை பின்னர் அகற்றப்பட்டன. நகரத்தை சுற்றி அந்தக் கொடிகள் ஏன் ஏற்றப்பட்டன என்பதை விவரிக்க அவர் மறுத்துவிட்டார்.


$ads={2}


இலங்கையின் தேசியக் கொடியானது, ஒரு வாளேந்திய சிங்கம், செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தை உடைய இரண்டு சிறிய கீற்றுக்கள். அவை இலங்கையில் வாழும் குடிமக்களான தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த 1972 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டன.  மேலும் நான்கு அரச இலைகள் அரசினால் சேர்க்கப்பட்டது. அரசாங்க சட்ட விதிமுறைகளின் படி, குறைபாடுள்ள தேசியக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோத மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.