திகன, பல்லேகலை நில அதிர்வு தொடர்பான தெளிவூட்டல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திகன, பல்லேகலை நில அதிர்வு தொடர்பான தெளிவூட்டல்!


இலங்கையில் நேற்று ஏற்பட்ட நில அதிர்வு இயற்கையான செயற்பாடு அல்லவென தேசிய புவியியல் அய்வு மையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள ஹாரகம, மைலபிட்டிய, திகன பிரதேசங்களில் நேற்று இரவு 8.30 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவம் இயற்கையான நில அதிர்வு அல்ல என ஆய்வு நிறுவனத்தின் உள்ள சுனாமி எச்சரிக்கை நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி, பல்லேகல பிரதேசத்தில் அமைந்துள்ள நில அதிர்வு அளவீட்டில் மட்டுமே சில சமிக்ஞைகள் பதிவாகியுள்ளதாகவும் இது இயற்கையான சம்பவம் அல்ல என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்ள ஏனைய நான்கு நில அதிர்வு அளவீடுகளில் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் விசேட அதிகாரிகள் குழுவொன்று பல்லேகலை பிரதேசத்தில் உள்ள நில அதிர்வு அளவீட்டில் பதிவாகியுள்ள சமிக்ஞை தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.