பஸ்களில் செல்வோருக்கான அதிரடி சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ்களில் செல்வோருக்கான அதிரடி சட்டம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாமல் கடமையில் ஈடுபடும் பஸ் ஊழியர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் குற்றவாளியாகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பஸ் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டத்திட்டங்கள் இதுவரையில் செயற்படுத்தப்படுவதில்லை என கூறப்படுகின்றது.

இந்த சட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்காக தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.