காருக்குள் நபரொருவர் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காருக்குள் நபரொருவர் சடலமாக மீட்பு!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து நேற்று பிற்பகல் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 42 வயதான குறித்த நபர் காரொன்றிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
$ads={1}
அவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராக கடமையாற்றி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற பின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
மேலும் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.