ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வதில் எழுந்துள்ள சட்டச் சிக்கல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வதில் எழுந்துள்ள சட்டச் சிக்கல்!!

ஞானசார தேரரை தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கலகள் உள்ளதாக அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ள போதிலும் இதில் சட்டச் சிக்கல் உள்ளளதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களும் தேர்தலில் போட்டியிட முன்னர் தேசிய பட்டியலில் பெயர் குறிக்கப்பட்டவர்களும் மாத்திரமே தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்வாங்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கட்சியின் செயற்குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம். காணப்படும் சட்டச்சிக்கலை முறையாக வெற்றி கொண்டு ஞானசார தேரரை நிச்சயம் பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். அத்துரலியே ரதன தேரர், எங்கள் அபே ஜன பல கட்சியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மாத்திரமே. தேசியப் பட்டியல் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரருக்கு தேசிய பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை வழங்கவே தீர்மானித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘அபே ஜன பல’ கட்சியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட ஞானசார தேரர் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.