
‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ள போதிலும் இதில் சட்டச் சிக்கல் உள்ளளதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களும் தேர்தலில் போட்டியிட முன்னர் தேசிய பட்டியலில் பெயர் குறிக்கப்பட்டவர்களும் மாத்திரமே தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்வாங்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கட்சியின் செயற்குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம். காணப்படும் சட்டச்சிக்கலை முறையாக வெற்றி கொண்டு ஞானசார தேரரை நிச்சயம் பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். அத்துரலியே ரதன தேரர், எங்கள் அபே ஜன பல கட்சியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மாத்திரமே. தேசியப் பட்டியல் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரருக்கு தேசிய பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை வழங்கவே தீர்மானித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘அபே ஜன பல’ கட்சியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட ஞானசார தேரர் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.