
பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 300 பேர் பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிங்குரக்கொட மற்றும் தமன்கடு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 58 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இதுவரையில் குறையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 413 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.