கொரோனா ஆபத்து தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா ஆபத்து தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய அறிக்கை!

இலங்கையில் கொரோனா ஆபத்துக்கள் குறையவில்லை என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 300 பேர் பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் ஹிங்குரக்கொட மற்றும் தமன்கடு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 58 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
$ads={1}
கொரோனா நோயாளர்களை அடையாளம் காணுவதற்கான PCR பரிசோதனைக்கான இதுவரையில் 1.3 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இதுவரையில் குறையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
இந்நிலையில் நாடு முழுவதும் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 413 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.