ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வதை அபே ஜன பல கட்சி உறுதி செய்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வதை அபே ஜன பல கட்சி உறுதி செய்தது!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது என அபே ஜன பல கட்சி தீர்மானித்துள்ளது.


கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய அனுமதியை வழங்கியதாக அக்கட்சியின் ஊடக செயலாளர் எரந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில், கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க உள்ளனர்.


இந்த நிலையில் ஞானசார தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதியாகியுள்ளது.


நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சி 67,758 வாக்குகளை பெற்று தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.