முடிவுக்கு வந்த சஜித்தின் தேசியப் பட்டியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முடிவுக்கு வந்த சஜித்தின் தேசியப் பட்டியல்!

ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த பெயர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={1}

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்ணான்டோ, எரான் விக்கிரமரட்ன,இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், மயந்த திசாநாயக்க, மற்றும் தயானி கமகே ஆகியோரின் பெயர்களே தேசியப்பட்டிலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

$ads={2}

ஏற்கனவே தமது கட்சியில் இருந்து ஒருவருக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்ஹக்கீம் கோரியிருந்தார்.

அத்துடன் ஏற்கனவே இணங்கிக்கொண்டப்படி 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தைக் கோரியிருந்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.