மைத்திரிக்கு எந்தவொரு பதவியும் இல்லையா? ஏன்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மைத்திரிக்கு எந்தவொரு பதவியும் இல்லையா? ஏன்?

அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக துணை பிரதமர் பதவியை உருவாக்கி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்கு அரச உயர் மட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நெருக்கமாக உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அரசியலமைப்பிற்கு வெளியே புதிய பதவிகளை உருவாக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


$ads={1}

புதிய நாடாளுமன்றம் கூடிய பின்னர் துணைப் பிரதமர் என்கிற ஒரு பதவியை ஏற்படுத்தி அதனை மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுக்க அரச தரப்பு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகார விசாரணையில் மைத்திரியின் பெயர் இருப்பதுடன். அவருக்கெதிராக பாரதூர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, துணைப்பிரதமர் என்கிற பதவியை வழங்குவதை அரச உயர்பீடம் தவிர்க்க முடிவெடுத்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.