இனி அரச நிறுவனங்களுக்கு புது சட்டம் - ஜனாதிபதியின் அதிரடி முடிவு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி அரச நிறுவனங்களுக்கு புது சட்டம் - ஜனாதிபதியின் அதிரடி முடிவு

தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்படும் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களை அரச கட்டடங்களில் நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை விடவும் அதிக பணம் மீதப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய புதிய அரசாங்கத்தின் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


$ads={1}

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் விவசாய அமைச்சிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட தனியார் கட்டடத்திற்கு பதிலாக விவசாய அமைச்சிற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய மாளிகைக்கு கொண்டு செல்வற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேமுறையில் தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்பட்ட 30 அரச அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் அரச கட்டடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.