
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
அனுராதபுரம் களனி ரஜமஹா விகாரையில் சற்று முன்னர் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பதவி ஏற்பு நிகழ்வில் மஹா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று, இலங்கை அரசியல் வரலாற்றில் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.