திங்கள் அன்று ஏற்பட்ட மின்துண்டிப்புக்கான காரணத்தை முன்வைத்த அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திங்கள் அன்று ஏற்பட்ட மின்துண்டிப்புக்கான காரணத்தை முன்வைத்த அமைச்சர்!

கடந்த திங்கள் அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு கெரவலபிட்டிய துணை மின்நிலையத்தில் அதிகாரி ஒருவர் செய்த தவறுதான் காரணம் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை ஆகஸ்ட் 24 அன்று ஒப்படைக்கப்படும் என அவர் அமைச்சரவையில் தெரிவித்தார்.

முந்தைய நான்கு சந்தர்ப்பங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் இதேபோன்ற மின் தடைகளைத் தடுக்க, குழுவால் சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள் குறித்து நாட்டிற்கு விளக்கமளிப்பேன் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் ஆலையை மீள இயக்க முடியுமென இலங்கை மின்சார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அலகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.