திங்கள் முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திங்கள் முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்!

பொதுத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துபாடசாலைகளையும் முழுமையாக ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
$ads={1}
அதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாகஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

200 இற்கும் மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண முடியுமானால் அனைத்துமாணவர்களையும் அழைக்க முடியும்.

200 ஐ விட அதிக மாணவர்கள் காணப்படுகின்ற பாடசாலைகளில் கட்டம் கட்டமாக மாணவர்களை வரவழைக்கதீர்மானிக்கப்பட்டுள்ளது.
$ads={1}
அதற்கமைய 200 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்டு பாடசாலைகளில் ,

  • திங்கட்கிழமை - 1, 2 ஆம் வகுப்புக்கள்
  • செவ்வாய்கிழமை - 2 , 5 ஆம் வகுப்புக்கள்
  • புதன்கிழமை - 3 , 5 ஆம் வகுப்புக்கள்
  • வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை - 4 , 5 ஆம் வகுப்புக்கள் 
என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.

வழமையான நேரத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அதில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஏனைய வகுப்புக்கள்

  • திங்கட்கிழமை - 6 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்
  • செவ்வாய்கிழமை - 7 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்
  • புதன்கிழமை - 8 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள்
  • வியாழக்கிழமை , வெள்ளிக்கிழமை - 9 , 10 , 11 , 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்கள் 
என்ற ரீதியில் ஆரம்பமாகவுள்ளன.
$ads={2}
இவற்றில் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

6 , 7 , 8 , 9 ஆம் வகுப்புக்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.30 க்கு நிறைவடையும். 10 , 11, 12 மற்றும் 13 ஆம்வகுப்புக்களுக்கு காலை 7.30 மணி தொடரக்கம் மாலை 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆசிரியர்கள் திங்கட்கிழமை முதல் அனைத்து ஆசிரியர்களும் வழமையைப் போன்று பாடசாலைக்கு வருகை தர வேண்டும். மாலை 3.30 மணிக்கு முன்னர் பாடசாலை நிறைவடையும் வகுப்பாசிரியர்கள் 1.30 மணிக்கு பாடசாலையிலிருந்து செல்ல முடியும் எனவும் அவர்தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.