இலங்கை வருவதற்கு மத்திய கிழக்கில் மட்டும் 54000 நபர்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வருவதற்கு மத்திய கிழக்கில் மட்டும் 54000 நபர்கள் பதிவு!


கொரோனா பரவலை அடுத்து மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு 54000 இலங்கை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் அனைத்தும் தமது வரையறைக்கு அப்பால் சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6000 பேரை மாத்திரமே உள்வாங்கக்கூடிய வசதிகள் உள்ளன.

எனினும் தற்போது நாடளாவிய ரீதியில் 65 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7058 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட பின் மேலும் 14 நாட்களில் தமது வீடுகளில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.