3 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மின்சார கட்டமைப்பு - ஏன் செயலற்று போனது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மின்சார கட்டமைப்பு - ஏன் செயலற்று போனது?

இலங்கை முழுவதும் நேற்று பிற்பகல் 12.35 மணியளவில் மினசார தடை ஏற்பட்டமையானது புதிய அரசாங்கம் முகம் கொடுத்த முதலாவது சவாலாகும்.

மின்சார தடை ஏற்பட்மைக்கு முக்கிய காரணம் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என கூறப்படுகின்றது. எனினும் அதற்கு மேலதிகமாகவும் சில பிரச்சினைகள் இருக்கலாம் என மின்சார சபையின் பொறியிலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


$ads={2}

பத்தரமுல்ல பெல்வத்தையிலுள்ள மின்சார கட்டமைப்பு செயற்பட்டமை தொடர்பிலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி மார்ச் மாதம் 13ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் பெல்வத்தையிலுள்ள மின்சார கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இந்த கட்டமைப்பிலும் சில மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.


$ads={1}

இந்நிலையில் நாட்டில் மின்சாரம் தடைப்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று அறிவித்திருந்தார்.

நேற்று மதிய நேரத்தில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது. தடைப்பட்ட மின்சார விநியோகம் வழமை நிலைக்கு திருப்ப நீண்ட நேரம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.