6 கோடி பெறுமதியான தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முயன்ற இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

6 கோடி பெறுமதியான தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முயன்ற இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஆறு கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முயன்ற போது சந்தேக நபர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.

மாதகலைச் சேர்ந்த குறித்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறை கடற்படையினரால் சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதன்போது, கைப்பற்றப்பட்ட ஐந்து கிலோ 500 கிராம் தங்கம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.