இலங்கையில் தனியாக இயங்கும் 1,400 பள்ளிவாயல்கள்; மேலும் நிதி மோசடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தனியாக இயங்கும் 1,400 பள்ளிவாயல்கள்; மேலும் நிதி மோசடி!

Mr. Shabry Haleemdeen, Attorney at Law
இலங்கையில் சுமார் 1,400 பள்­ளி­வா­சல்கள் வக்பு சபை­யுடன் தொடர்­பு­களைப் பேணாது தன்னிச்சை­யாக செயற்­ப­டு­கின்­றன என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

அவற்றில் பல பள்­ளி­வா­சல்­களில் நிதி ஊழல் மோச­டிகள் இடம்பெற்­று­வ­ரு­வ­தாக புகார்கள் கிடைத்­துள்­ளன. அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களின் சட்­ட­ரீ­தி­யற்ற நிர்­வா­கங்கள் கலைக்­கப்­பட்டு ஜன­நா­யக ரீதியில் புதிய நிர்­வா­கங்கள் அமைக்­கப்­ப­டல் வேண்டும்.

மேலும் வக்­பு­ ச­பையின் தொடர்புகளைப் பேணாது தன்­னிச்­சை­யாகச் செயற்­படும் நிர்வாகங்களுக்கு எதி­ராக கடும் நடவ­டிக்கை எடுக்க வக்­பு­ சபை தீர்­மா­னித்­துள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

இவ்­வா­றாக தன்­னிச்­சை­யாக செயற்­படும் பள்­ளி­வா­சல்கள் நீண்ட கால­மாக வக்பு சபை­யுடன் தொடர்புகளின்றி இருக்­கின்­றன. அவற்றின் வரவு செல­வுகள் என்­பன வக்பு சபைக்குச் சமர்ப்பிக்கப்­ப­டு­வ­தில்லை. நிர்­வாக சபை­யி­லுள்ள சிலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தாக புகார்கள் கிடைத்­துள்­ளன. இவ்­வா­றான நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்கப்பட­வுள்­ளது. வக்பு சபையின் சட்­ட­வி­தி­க­ளுக்கு அமைய அவர்­க­ளுக்கு எதி­ராக நீதீமன்றின் மூலம் நட­வ­டிக்கை எடுக்க முடியும்.

வக்பு சொத்­துகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். வரவு செல­வுகள் வரு­டாந்தம் சமர்ப்பிக்கப்படவேண்டும் இவ்­வாறு வரவு செலவு சம்ர்ப்­பிக்­கப்­ப­டாது ஒரு சில நிர்­வா­கிகள் மோச­டி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என்றார்.

இதே­வேளை, கொரோனா வைரஸ் கார­ண­மாக நாட்டில் சுமார் 300 பள்­ளி­வா­சல்­களின் பதவிக்காலம் முற்­றுப்­பெற்றும் புதிய நிர்­வா­கங்கள் தெரிவு செய்­யப்­ப­டா­துள்­ளன. தற்­போது கொரோனா வைரஸ் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் உள்­ளதால் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் ஜமா­அத்­தாரைக் கூட்டி ஜன­நா­யக ரீதியில் புதிய நிர்­வா­கங்­களைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கால எல்லைக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறும் 300 பள்ளிவாசல்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தகவல்: விடிவெள்ளி
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.