பாதுகாப்பு முத்திரைகளை அரச அச்சக திணைக்களம் ஊடாக அச்சிட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதுகாப்பு முத்திரைகளை அரச அச்சக திணைக்களம் ஊடாக அச்சிட நடவடிக்கை!

வெளிநாட்டு அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய அரச அட்டைகளை அச்சிடும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லிவினால் அரச அச்சக திணைக்களத்தின் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச அச்சக திணைக்களத்தின் முன்னேற்றங்களை ஆராயும் நோக்கில் ஊடகத் துறை அமைச்சின் உள்ளக அரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் முத்திரைகள், வாக்காளர் அட்டைகள் மற்றும் வீசா ஸ்டிக்கர் உள்ளிட்ட பாதுகாப்பு முத்திரைகள் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக தற்போது அச்சிடப்படுகின்றன.

அத்துடன், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் 50 வீதமான அச்சு நடவடிக்கைகளும் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையிலேயே, வெளிநாட்டு அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய அரச அட்டைகளை அச்சிடும் நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அரச அச்சக திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.